தஸ்கெண்ட்: தஸ்கெண்ட் ஓபன் டென்னிஸ் தொடரில், செக் குடியரசின் லிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
உஸ்பெகிஸ்தானில் தஸ்கெண்ட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், செக் குடியரசின் கிறிஸ்டினா லிஸ்கொவா, ஜப்பானின் ஹிபினோவை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் அசத்திய லிஸ்கோவா, முதல் செட்டை 6-3 என வென்றார். இதற்கு இரண்டாவது செட்டையும் 2-6 என கைப்பற்றிய ஹிபினோ பதிலடி கொடுத்தார். வெற்றியாளைரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் அசத்திய லிஸ்கோவா 6-3 என சுலபமாக தன்வசப்படுத்தினார்.
முடிவில், செக் குடியரசின் லிஸ்கோவா, ஜப்பானின் ஹிபினோவை 6-2, 2-6, 6-3 என வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Mobile AppDownload Get Updated News