தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டத்தில் (2 நிமிடம் 2.70 விநாடி) தங்கப்பதக்கம் வென்றார்.
அப்போது ஊக்கமருந்து சோதனைக்காக கோமதி மாரிமுத்து சாம்பிள் பெறப்பட்டது. இந்நிலையில் ஊக்கமருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக தகவல்கள் வெளியானது.
நான்ட்ரோலோன் என்ற தடை செய்யப்பட்ட பொருள் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்தது. இதனால், கோமதிக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
ஒருவேளை அவரின் ‘பி’ சாம்பிளிலும் அவருக்கு எதிராக அமைந்தால், கோமதி அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.
Mobile AppDownload Get Updated News