போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவராவார்.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர், கடந்த 2015ல் சுமார் ரூ. 150 கோடி மதிப்புள்ள சொகுசு விமானத்தை தனக்கென சொந்தமாக வாங்கினார்.
இந்த விமானம் நேற்று முன் தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. ஆனால் ரொனால்டோ, இதில் அதிர்ஷ்டவசமாக பயணம் செய்யவில்லை. அந்த நேரத்தில் டிராட்மண்ட் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றிருந்தார். விமானத்தில் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதாக பின் கண்டுபிடிக்கப்பட்டது.
Mobile AppDownload Get Updated News