கோல்ஃப் விளையாட்டில் சர்வதேச அளவில் பிரபலமாக விளங்குபவர் டைகர் உட்ஸ். 43 வயதான இவர் கடந்த மாதம் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கோல்ஃப் போட்டியில் வெற்றி அடைந்தார். பல காயங்களுக்குப் பின் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பிய அவர், 11 ஆண்டுகள் கழித்து பெரிய போட்டியில் சாம்பியனாகியுள்ளார்.
இதனையடுத்து டைகருக்கு அமெரிக்காவின் உயரிய விருதாகக் கருதப்படும் அதிபரின் பதக்கத்தை (Presidential Medal of Freedom) வழங்குவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். சிறந்த மனிதர் என்றும் சர்வதேச அளவில் அமெரிக்காவின் திறமைக்கு அடையாளமாக இருப்பவர் என்றும் ட்ரம்ப் பாராட்டினார்.
இதன்படி, வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் விருது விழா திங்கட்கிழமை நடைபெற்றது. டைகர் உட்ஸின் தாயார், இரு பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய உட்ஸ், தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், “இது ஒரு நம்பமுடியாத அனுபவம்.” எனவும் கூறினார்.
Mobile AppDownload Get Updated News