ISSF World Cup 2019: Apurvi Chandela wins gold in Women's 10 m Air Rifle event https://t.co/lcVAB8oczB Apurvi Chandela on winning gold in Women's 10 m Air Rifle event at ISSF World Cup 2019: It's been a bit tough but I… https://t.co/Oy6clxv009
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அபுர்வ்வி சந்தெலா பங்கேற்றார்.
இதில் 252.9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்த அபுர்வி தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார். இதன் மூலம் இறுதிப்போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.
இந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கமாகவும் இது அமைகிறது. சீனா வீராங்கனை வெள்ளப் பதக்கத்தையும் ஹாங்காங் வீராங்கனை வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
அபுர்வி ஏற்கெனவே டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்த வீராங்கனைகளும் ஒலிம்பிக் போட்டியில் தங்கள் இடத்தை உறுதிசெய்தனர்.
தங்கம் வென்று பற்றி பேட்டி கொடுத்த அபுர்வி, "போட்டி கடினமாகவே இருந்தது. ஆனால், நான் நன்றாக பயிற்சி எடுத்திருந்ததால் விட்டுக்கொடுக்கவில்லை. இன்று நல்ல முடிவு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பல முக்கிய போட்டிகள் காத்திருக்கின்றன. ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்" எனக் கூறினார்.
Mobile AppDownload Get Updated News