டோக்கியோ: பான் பசுபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்பரா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜப்பானின் டோக்கியோவில் பான் பசுபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்பரா ஜோடி, சீனாவின் லியாங் சென், யாங் ஜோடியை சந்தித்தது.
இதில் துவக்க முதல் ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி, முதல் செட்டை 6-1 என சுலபமாக வென்றது. ,தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி, 6-1 என மிக எளிதாக கைப்பற்றியது.
இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்பரா ஜோடி, சீனாவின் லியாங் சென், யாங் ஜோடியை 6-1, 6-1 என எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றியது.
Mobile AppDownload Get Updated News