சென்னை: ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு குரூப்-1 பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். நேற்று பிரேசிலில் இருந்து, இந்தியா வந்த மாரியப்பன் தங்கவேலு டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன்பின், தமிழகம் வந்த அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் கோரிக்கை வைத்தால் குரூப் 1 நிலையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News