கோவையை சேர்ந்த தமிழ் கனி என்ற சிறுமி தாய்லாந்தில் நடைபெற்ற வாள் சண்டைப் போட்டியில் பங்கேற்று, வெண்கலம் வென்று, சாதனை படைத்துள்ளார்.
2016 தாய்லாந்து ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இவர், கோவை மாநகர மக்களின் நிதி உதவியைப் பெற்று, தாய்லாந்து சென்று இந்த சாதனையை புரிந்துள்ளார். சோஷியல் கேபிடல் என்ற பெயரில் கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், தமிழ் கனிக்கு இதற்கான நிதி உதவி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.
வாள் சண்டைப் போட்டியில் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்ற தமிழ் கனி, வெண்கலப் பதக்கம் வென்று, சாதனை படைத்தார். இன்று காலை கோவை திரும்பிய அவருக்கு உறவினர்கள் மற்றும் கோவை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Mobile AppDownload Get Updated News