Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

அரசு வேலை தராவிட்டால் பரிசும் தேவையில்லை: சுதா சிங் ஆவேசம்

$
0
0

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை சுதா சிங் உ.பி., மாநில அரசு வழக்கிய ரூ.30 லட்சம் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீப்பிள் சேஸ் வீராங்கனை சுதா சிங் 3,000 மீட்டர் போட்டியில் 9 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். இத்துடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றவர்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இவர் அண்மையில் இந்தோனேஷியாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.

இவருக்கு விளையாட்டுத்துறை இயக்குநரகத்தில் வேலை வழங்குவதாக அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்னும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற உ.பி. வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உ.பி. ஆளுநர் ராம் நாயக் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

இதில், கலந்துகொண்ட சுதா சிங், “அரசு உறுதி அளித்தப்படி விளையாட்டு இயக்குநரகத்தில் வேலை கிடைக்கவில்லை என்றால், அரசு வழங்கிய ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை திரும்பக் கொடுத்துவிடுவேன்.” என்றும் “பிறகு உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்தே வெளியேறிவிடுவேன்.” என்றும் கூறினார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>