இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள், கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர் சச்சின் டெண்டுல்கர் ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ அணியில் பங்குதாராக இருந்தார். பங்குதாரராக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஓவ்வொரு போட்டியிலும் பார்வையாளராக பங்கேற்று அணிக்கு ஊக்கமளித்து வந்தார்.
5வது ஐஎஸ்எல் சீசன் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர், கேரளா பிளாஸ்டர் அணியில் தனக்குச் சொந்தமான 20% பங்குகளை ஹைப்பர் மார்கெட் மற்றும் ஷாப்பிங் மால் என்ற நிறுவனத்தின் தொழிலபதிபருக்கு மாற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சச்சினின் இந்தத் திடீர் முடிவால், கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து அணியின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.
Mobile AppDownload Get Updated News