Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

டேவிஸ் கோப்பை: வெளியேறிய இந்தியா: இருந்தாலும் ஃபைனல் வாய்ப்பு!

$
0
0

கிரால்ஜிவோ: செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் பிளேஆப் சுற்றின் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் போபண்ணா, மைனேனி ஜோடி தோல்வியடைந்தது.

செர்பியாவில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான ‘வேர்ல்டு குரூப் பிளே–ஆப்’ போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா, செர்பியா அணியை எதிர்கொள்கிறது.

* இதன் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், செர்பியாவின் லாஸ்லோ ஜெரேவிடம் 6–3, 4–6, 6–7, 2–6 என தோல்வியடைந்தார்.
*அடுத்து நடந்த ஒற்றையர் பிரிவு இரண்டாவது போட்டியில் இந்தியாவின் குன்னீஸ்வரன், செர்பியாவின் லாஜோவிக்கிடம் 4-6, 3-6, 4-6 என்ற செட்களில் வீழ்ந்தார்.


போபண்ணா ஜோடி தோல்வி:
இந்நிலையில் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் போபண்ணா, மைனேனி ஜோடி, செர்பியாவின் நிகோலா மிலோஜெவிக், டானிடோ பெட்ரோவிக் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் முதல் செட்டை 6-7 என கோட்டைவிட்ட போபண்ணா ஜோடி, அடுத்த செட்டை 6-2 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டின் துவக்கம் முதலே சொதப்பிய போபண்ணா ஜோடி, 7-6 என தவறவிட்டது.

இறுதியில், இந்தியாவின் போபண்ணா, மைனேனி ஜோடி, செர்பியாவின் நிகோலா மிலோஜெவிக், டானிடோ பெட்ரோவிக் ஜோடியிடம் 6-7, 6-2, 7-6 என்ற செட்களில் தோல்வியடைந்தது. இதன் மூலம், 3-0 என செர்பியாவிடம் வீழ்ந்த இந்திய அணிக்கு, டேவிஸ் கோப்பை குரூப் சுற்றுக்குள் செல்லும் கனவு கலைந்தது.

அடுத்த ஆண்டு பாத்துக்கலாம்.....
இந்நிலையில் இந்த தோல்விகுறித்து இந்திய கேப்டன் மகேஷ் பூபதி கூறுகையில், ‘அடுத்த ஆண்டு குரூப் சுற்றுக்குள் செல்ல முயற்சி செய்வோம். அது எப்படியும் இந்தியாவில் தான் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது சாதகமாக யோசிப்பது மட்டுமே சிறந்தது.’ என்றார்.
65827774

ஃபைனல் வாய்ப்பு உள்ளது:
இந்நிய அணி, இதில் 3-0 என தோல்வியை சந்தித்த போதும், வரும் நவம்பர் 18-24, 2019ல் மாட்ரிட்டில், நடக்கும் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது. வரும் பிப்ரவரி, 2019ல் உள்ளூ நாடு மற்றும் அந்நிய மண்ணில் நடக்கும் டேவிஸ் கோப்பை ஃபைனல் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் 18 அணிகள் பங்கேற்கும்.

அதில் 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும், இதிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும். அதில் இருந்து 2 அணிகள் ‘வைல்டு கார்டு’ மூலம் டேவிஸ் கோப்பை ஃபைனலில் பங்கேற்க சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அனுமதி அளிக்கும். அதனால் இந்திய அணிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>