இங்கிலாந்தின் புகழ் பெற்ற நியூகேசில் மற்றும் சண்டர்லாந்து அணிகளுக்காக விளையாடி புகழ்பெற்றவர் மைக்கேல் சோப்ரா. இவர், சமீபத்தில் இந்திய குடியுரிமை பெற்று இந்திய அணிக்காக சர்வதேச அளவில் கால்பந்து விளையாடுவேன் என தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
தற்போது சாத்தியமில்ல விஷயத்துக்கு சோப்ரா ஆசைப்படுவதாக இந்திய கால்பந்து பயிற்சியாளர் கான்ஸ்டண்டின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கால்பந்து பயிற்சியாளர் கான்ஸ்டண்டின் கூறியது:
மைக்கேல் சோப்ரா நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயத்துக்காக ஆசைப்படுகிறார். அவருக்கு ஏற்கனவே 32 வயதாகிவிட்டது. தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பித்தாலும் அதற்கு எப்படியும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். அவர் இந்திய அணிக்காக விளையாடும் வயதை அப்போது நிச்சயமாக தாண்டிவிடுவார். இப்போது இவ்வளவு அக்கரையாக பேசும் அவர், கடந்த 2002லேயே அவரிடம் நான் பேசினேன். அப்போது அவர் அதை கண்டுகொள்ளவேயில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Mobile AppDownload Get Updated News