Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

நரசிங் யாதவ் வழக்கு சி.பி.ஐ.,க்கு பரிந்துரை!

$
0
0

புதுடில்லி: மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்துள்ளதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்தவீரர் நரசிங் யாதவிற்கு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்ததால் அவரின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது. ஆனால் இவரது உணவில் யாரோ ஒருவர் அவருக்கு தெரியாமல் தடைசெய்யப்பட்ட பொருளை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை நிரூபிக்க அவரிடம் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் இவ்வழக்கு இழுத்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் இவ்வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்க இந்திய பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் புஷன் சிங் கூறியது:
நான் நரசிங் யாதவ் வழக்கின் சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு சென்றேன். துப்பு மற்றும் ஆதாரங்கள் கிடைக்காமல் உள்ள இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>