பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் அகடமியில்ல் நடந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கலந்து கொண்டார். அதில் சிந்து, கோபிசந்த் ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது விஜய் கோயல் கூறியது:
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களைப்போல பாராலிம்பிக் வீரர்களும் கருதப்படுவார்கள். அவர்களுக்கும் கேல் ரத்னா விருதுகள் வரும் காலங்களில் நிச்சயமாக வழங்கப்படும். ஆனால் என்னைப்பொறுத்தவரை கேல் ரத்னா விருதை விட ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று பதக்கம் வெல்வதே சிறப்பானது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக குழுக்கள் விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலந்து கொண்ட பி.வி.சிந்து கூறியது:
பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வது எளிதான காரியமல்ல, இந்திய வீரர்கள் மீண்டும் தாயகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களும் சிந்து, ஷாக்சியைப்போலவே கவுரவிக்கப்பட வேண்டியவர்கள் தான்.
இவ்வாறு சிந்து கூறினார்.
Mobile AppDownload Get Updated News