#IthuNammaAatam, #IdhuNammaAdayalam! #ThottuPaaruNaangaTharumaru Proud and excited to be associated with… https://t.co/FK5yk2oS7g
கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் புரோ கபடி லீக் நடைபெற்று வருகிறது. அதன் படி 6வது புரோ கபடி லீக் போட்டி செப்டம்பா் மாதம் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. தமிழ் தலைவாஸ் அணியின் ஜொ்சி அறிமுக விழா வியாழன் கிழமை சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதுவராக உள்ள நடிகா் விஜய் சேதுபதி, தமிழ் தலைவாஸ் அணியின் ஜொ்சியை அணிந்த படி கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், கபடி விளையாட்டு நம் வரலாற்றோடும், பாரம்பரியத்தோடும், பின்னி பிணைந்த ஒன்று. தமிழா்களுடைய விளையாட்டான கபடியை நாம் தான் மேம்படுத்த வேண்டும்.
நமது வியைாட்டை மேம் படுத்துவதன் மூலம் தமிழ் மொழி மேம்படும். கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கபடிக்கும் கொடுக்க வேண்டும். இந்த வருட புரோ கபடி சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதுவராக இருந்து இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் பெருமையடைகிறேன் என்று தொிவித்துள்ளாா்.
Mobile AppDownload Get Updated News