Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் தேசிய தடகள விளையாட்டு வீரர்: ஏமாற்றிய முதல்வர்!

$
0
0

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை வென்ற தேசிய தடகள விளையாட்டு வீரர் மன்மோகன் சிங் லோதி பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கப்பூரைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மன்மோகன் சிங் லோதி. மாற்றுத்திறனாளிகளுக்காக தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். இதையடுத்து, இவர், தேசிய அளவில் வென்று பதக்கங்களை பெற்றுள்ளதால், மன்மோகன் சிங் லோதிக்கு அரசு உதவித் தொகையும், கூடவே அரசு வேலையும் வழங்கப்படும் என்று மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். ஆனால், அறிவித்தபடி, லோதிக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. இதையடுத்து, தனது தேவைக்காக தெருவில் நின்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு உதவி மற்றும் வேலைவாய்ப்பு தருவதாக கூறிய முதல்வரை நான் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். ஆனால், எந்த பலனும் இல்லை. குடும்ப சூழ்நிலை, விளையாட்டிலும் பயிற்சி பெற முடியாத சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்