Madhya Pradesh: Manmohan Singh Lodhi, a National-level para-sprinter from Narsinghpur, says he has started begging… https://t.co/9uBvvnc4aU I have met Chief Minister four times, he made promises but didn't fulfil any of them. I am financially weak. I need… https://t.co/OaUDKph6Cq
மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கப்பூரைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மன்மோகன் சிங் லோதி. மாற்றுத்திறனாளிகளுக்காக தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். இதையடுத்து, இவர், தேசிய அளவில் வென்று பதக்கங்களை பெற்றுள்ளதால், மன்மோகன் சிங் லோதிக்கு அரசு உதவித் தொகையும், கூடவே அரசு வேலையும் வழங்கப்படும் என்று மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். ஆனால், அறிவித்தபடி, லோதிக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. இதையடுத்து, தனது தேவைக்காக தெருவில் நின்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு உதவி மற்றும் வேலைவாய்ப்பு தருவதாக கூறிய முதல்வரை நான் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். ஆனால், எந்த பலனும் இல்லை. குடும்ப சூழ்நிலை, விளையாட்டிலும் பயிற்சி பெற முடியாத சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News