ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறுகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் பங்குபெற்றார். அவர் 16.77 நிமிடத்தில் இலக்கை பூர்த்தி செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய விளையாட்டில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதற்குமுன் 1970ஆம் ஆண்டு மொகிந்தர் சிங் கில் தங்கம் வென்றார்.
Mobile AppDownload Get Updated News