செக் குடியரசில் நடைபெற்று வரும் தடகள போட்டியில், ஆண்களுக்கான 400 மீ ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் முகமது அனாஸ் யாஹியா தங்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளார்.
செக் குடியரசில் தற்போது சினா நோவிஹோ மெஸ்தா நத் மெதுஜி என்ற தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர்களுக்கான 400 மீ ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் முகமது அனாஸ் யாஹியா பந்தய தூரத்தை 45.24 வினாடிகளில் கடந்து, தங்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம், முகமது அனாஸ் தனது முந்தைய சிறந்த நேரமான 45.31 வினாடி சாதனையை முறியடித்துள்ளார். இதையடுத்து, அவருக்கும் அவரது பயிற்சியாளர் கலினா பக்கரினா அவர்களுக்கும் இந்திய தடகள சங்கம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.
இதேபோல், பெண்கள் பிரிவில் 400 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை எம்ஆர் பூவம்மா, பந்தய தூரத்தஹி 53.01 வினாடி நேரத்தில் கடந்து தங்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் ராஜீவ் ஆரோக்யா 200 மீ ஓட்டப்பந்தயத்தில் 20.77 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
செக் குடியரசில் தற்போது சினா நோவிஹோ மெஸ்தா நத் மெதுஜி என்ற தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர்களுக்கான 400 மீ ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் முகமது அனாஸ் யாஹியா பந்தய தூரத்தை 45.24 வினாடிகளில் கடந்து, தங்கம் வென்றுள்ளார்.
Congrats Mohd. ANAS @muhammedanasyah for breaking his own 400m #Indian record in #Czech Rep. New Record-45.24s,Prev… https://t.co/SO7VLiUb5o
— Athletics Federation of India (@afiindia) 1532188840000
Breaking: 45.24s new Indian National Record in 400m by Muhammad Anas in Czech Republic National Meet. @afiindia @rahuldpawar
— Nitin Arya (@nitinarya99) 1532187660000
Poovamma wins women 400m in 53.01a in the VELKÁ CENA NOVÉHO MĚSTA NAD METUJÍ at Nové Město nad Metují (21. 7. 2018)… https://t.co/qDrg5u8tL4
— Rahul PAWAR (@rahuldpawar) 1532186197000
இதேபோல், பெண்கள் பிரிவில் 400 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை எம்ஆர் பூவம்மா, பந்தய தூரத்தஹி 53.01 வினாடி நேரத்தில் கடந்து தங்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் ராஜீவ் ஆரோக்யா 200 மீ ஓட்டப்பந்தயத்தில் 20.77 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
Mobile AppDownload Get Updated News