இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி அந்நாட்டின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் சீனாவின் முன்னணி வீரர் லின் டானை முதல் சுற்றில் எதிர்கொண்டார்.
இப்போட்டியில் பிரணாய் அதிரடியாகத் தொடங்கி முதல் செட்டை 21-15 என தன்வசப்படுத்தினார். அடுத்த செட்டை 9-21 எனக் கைப்பற்றினார் லின் டான். மூன்றாவது செட்டில் அதற்கு பதிலடி கொடுத்த பிரணாய் 21-14 என அந்த செட்டையும் தனதாக்கினார்.
இதன் மூலம் 21-15, 9-21, 21-14 என்ற செட் கணக்கில் பிரணாய் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் பிரணாய் லின் டானை வீழ்த்தியுள்ளார்.
Mobile AppDownload Get Updated News