Quantcast
Viewing all articles
Browse latest Browse all 2245

மலேசிய ஓபன்: ஸ்ரீகாந்த், சிந்து அரையிறுதியில் தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பியும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும் அரையிறுதியில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பியும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறினர்.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஜப்பானிய வீரர் கென்டோ மோமோடாவிடம் 13-21, 13-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் மோடோடா தொடர்ச்சியாக தனது 21வது வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சீன வீராங்கனை டை ஜூ யிங்கை எதிர்த்து விளையாடிய பி.வி.சிந்து 55 நிமிடங்கள் போராடி 15-21, 21-19, 11-21 என்ற செட்களில் தோல்வியுற்றார்.

ஏற்கெனவே இந்திய வீராங்கனை சாய்னா நேவால் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் இந்தத் தோல்வி மூலம் ஸ்ரீகாந்த் மற்றும் சிந்துவும் வெளியேறியுள்ளனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>