The #WorldCupBracket challenge for the Round of 16 closes today, 30 June. Enter your predictions by 15:00 CET for a… https://t.co/MqzhafhN5B
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான பீபா கால்பந்து உலகக்கோப்பை ரஷ்யாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் கோலாகலமாகத் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையின் தகுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 16 அணிகள் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்நிலையில், உலகக்கோப்பையின் அடுத்தச் சுற்றான நாக் அவுட் சுற்றுகள் இன்று தொடங்க உள்ளன. இன்று நடைபெறும் முதல் நாக்அவுட் சுற்றில், முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோத உள்ளன.
தரவரிசையில் 5 ஆம் இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியும் 7வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மெஸ்ஸி ரசிகர்கள், அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று, அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்று மிகவும் ஆவலோடு இப்போட்டியை எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல் இன்று நடைபெறும் இரண்டாவது நாக் அவுட் சுற்றில் ‘ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்த உருகுவே அணியும், ‘பி’ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த போர்ச்சுகல் அணியும், உருகுவே அணியில் சுவாரஸ், கவானி உள்ளிட்ட வீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் உள்ளதால் அந்த அணி மிகவும் பலம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ மட்டுமே சிறப்பாக விளையாடி வருவதால், மற்ற அணி வீரர்களும் நன்றாக விளையாடினால் மட்டுமே அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Mobile AppDownload Get Updated News