#BREAKING #AllEnglandOpen2018 #AllEnglandSuper1000
இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் 2018ஆம் ஆண்டின் ’ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்’ நடைபெற்று வருகிறது.
அதில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பான் நாட்டின் நொஸோமொ ஒகுஹராவை சந்தித்தார். முதல் சுற்றில் 20-22 என பின்னவரை சந்தித்தார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட சிந்து, 21-18, 21-18 என 2வது, 3வது சுற்றுகளைக் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இருவரும் தனது முழு பலத்தை நிரூபித்து விளையாடியதால், ஆட்டம் ஒரு மணி 24 நிமிடங்கள் வரை சென்றது.
இந்த வெற்றி மூலம், சிந்து - ஒகுஹரா நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் இருவரும் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளனர்.
மற்றொரு காலிறுதி போட்டியில் ஜப்பானின் அகானே யாமாகுச்சி மற்றும் ஸ்பெயினின் கரோலினா மரின் மோதுகின்றனர்.
Quarter-final: @Pvsindhu1 beats Nozomi Okuhara 20-22, 21-18, 21-18 to enter semi-finals
FOLLOW LIVE: https://t.co/pMuLlNRyOX
இதில் வெல்லும் வீராங்கனையுடன், அரையிறுதியில் பிவி சிந்து மோதவுள்ளார்.
PV Sindhu defeats Japan's Nozomi Okuhara 20-22, 21-18, 21-18 to enter semifinals of #AllEnglandOpen2018 Badminton Championship.
Mobile AppDownload Get Updated News