It’s a very proud and emotional moment for me as I have returned to the mat on international level after a gap of 3years. I want to dedicate this Gold medal won in #Commonwealthwrestlingchampionship at #SouthAfrica to my guru and to my Nation. JaiHind Got gold in commonwealth championship South Africa pic.twitter.com/LNTox9PF2F
2017 காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஸ் போட்டியில் இந்திய அணி சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் பல்வேறு தடைகளை தாண்டி தென் ஆப்ரிக்காவில் நடைப்பெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் பங்கேற்றுள்ளார் சுசில் குமார். இவர் இரு முறை ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற பெருமை படைத்தவர்.
74 கிலோ தொடரில் பங்கேற்ற சுசில் குமார், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் ஆகாஸ் குல்லரை வென்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
சுசில் குமார் கூறியதாவது:
பெருமையான மற்றும் உணர்ச்சிகரமான தருணம் இது. 3 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சி. இதில் தங்கப்பதக்கம் வென்று என் குருவுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது தான் என் கனவாக இருந்தது. என தனது டுவிட்டர் பக்கத்தில் சுசில் குமார் தெரிவித்துள்ளார்.
அதே போல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் 62 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு நியூசிலாந்தின் டைய்லா டுஹாயினி போர்டை 13-2 என்ற புள்ளி கணக்கில் வென்று அசத்தினார்.
Mobile AppDownload Get Updated News