Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பிஃபா கால்பந்து - பரிசுத் தொகை ரூ 2,600 கோடியாக உயர்வு

$
0
0

2018 கால்பந்து உலகக் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 2,600 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளின் வரிசையில் கால்பந்து இடம்பெற்றுள்ளது. இதனால் கால்பந்து உலகக் கோப்பையும் மிகவும் பிரமாண்ட திருவிழாவாகவே பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் கிரிக்கெட் எப்படி அதிக ரசிகர்களால் பார்க்கப்படுவது, போல் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது உலகின் பல்வேறு நாடுகளின் ரசிகர்களுக்கு கால்பந்து ஜுரம் பிடித்து விடும்.

பரிசுத் தொகை உயர்வு :
அதிக ரசிகர்கள் கொண்ட போட்டிக்கு பரிசுத்தொகை மட்டும் என குறைவாகவா இருக்கும். 2014ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, அதில் வெற்றி பெற்ற ஜெர்மானி அணிக்கு $ 38 மில்லியன் டாலர் பரிசாக அளிக்கப்பட்டது.

அடுத்தாண்டு 2018ல் ரஷ்யாவில் நடைப்பெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது பங்கேற்கும் அணிகளுக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத்தொகை 400 மில்லியன் டாலர். வெற்றி பெறும் அணிக்கு $38 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,600 கோடி பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 32 முன்னனி அணிகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>