புரோ கபடி லீக் போட்டியின் சென்னை சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. ஐந்தாவது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னையில் நடக்கும் லீக் சுற்று போட்டிகள் தற்போது நடக்கிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, யூ மும்பா அணியை எதிர்கொண்டது.
சொந்த மண்ணில் மூன்றாவது லீக் போட்டியில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி துவக்க முதல் அதிரடியாக புள்ளிகளை சேர்த்தது.
இதன் முதல் பாதியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி, 17-18 என ஒரு புள்ளி பின்தங்கியிருந்தது. பின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்றது. ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 26-26 என சமநிலை பெற்றது.
கடைசி ஐந்து நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணியால் யூ மும்பா அணியின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டாவது பாதியின் முடிவில், தமிழ் தலைவாஸ் அணி 30-33 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
Mobile AppDownload Get Updated News