Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சொந்த மண்ணில் தோல்வியுடன் துவங்கிய தமிழ் தலைவாஸ்!

$
0
0

சென்னை; புரோ கபடி லீக் தொடரின் சென்னை சுற்று போட்டிகளை தோல்வியுடன் தமிழ் தலைவாஸ் அணி துவங்கியது.

புரோ கபடி லீக் போட்டியின் சென்னை சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. ஐந்தாவது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கியது. இதில் 11 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இன்றைய லீக் போட்டியில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, தீபக் ஹூடா தலைமையிலான புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது.

இதில் ‘பி’ பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி, 2 ’டை’ என 32 புள்ளிகளுடன் ’பி’ பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.

இப்போட்டியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் தலைவாஸ் இணை உரிமையாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோர் பங்கேற்று துவங்கி வைத்தனர்.

பிரபல சினிமா நடிகர் சித்தார்த் தேசிய கீதம் பாட போட்டி துவங்கியது. இதில் சொந்த மண்ணில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி துவக்க முதல் அதிரடியாக புள்ளிகளை சேர்த்தது.

இதன் முதல் பாதியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி, 12-11 என முன்னிலை பெற்றது. பின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்றது. ஒருகட்டத்தில் 25-16 என புனே அணி முன்னேறியது.

கடைசி நேரம் வரை போராடியும், தமிழ் தலைவாஸ் அணியால் புனே அணியின் முன்னிலையிஅ எட்ட முடியவில்லை. இரண்டாவது பாதியின் முடிவில், தமிழ் தலைவாஸ் அணி 20-33 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>