So close, yet so far!
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டுத் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரணாவ் சோப்ரா – சிக்கி ரெட்டி இணை ஜப்பானைச் சேர்ந்த ஹோக்கி – ஹிரோட்டா ஆகியோர் இணையை இன்று எதிர்கொண்டது.
முதல் செட்டை 21-14 என கைப்பற்றி அசத்திய இந்திய இணை அடுத்த செட்டில் சரிவு கண்டது. இதனால், இரண்டாவது செட்டை 15-21 என இழந்தது. மூன்றாவது செட்டில் சுதாரித்துக்கொண்டு ஆடிய இந்திய இணை கடைசி நேரத்தில் கோட்டவிட்டது. இதனால், மூன்றாவது செட்டும் 19-21 என பறிபோனது.
முடிவில், 21-14, 15-21, 19-21 என்ற செட் கணக்கில் இந்திய இணை தோல்வி அடைந்து வெளியேறியது. முன்னதாக, இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா ஆகியோரும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பியும் தோல்வி அடைந்து வெளியேறினர்.
Pranaav Chopra and Sikki Reddy go down fighting in #JapanSS semis after losing 21-14, 15-21, 19-21 to Hoki and Hirota pic.twitter.com/3i17WjvJ4H
Mobile AppDownload Get Updated News