உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் காலிறுதிக்கு முந்தய சுற்றியில் இந்தியாவின் சாய் பிரனீத் வெற்றி பெற்றுள்ளார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவ் நகரில் நடக்கிறது. சாய்னா நேவால், பிவி சிந்து, கிடம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் உள்ளிட்ட இந்திய வீரர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இன்று நடந்த ஆண்களுக்கான தனிநபர் காலிறுதிக்கு முந்தய சுற்றில் இந்திய பேட்மிண்டன் வீரரான சாய் பிரனீத் மற்றும் இந்தோனேசியாவின் அந்தோனி சினிசுகா ஆகியோர் மோதினர்.
இதில் சிறப்பாக விளையாடிய சாய் பிரனீத் 21-14, 18-21,21-19 என்ற புள்ளி கணக்கில் வென்று அசத்தியுள்ளார்.
Mobile AppDownload Get Updated News