மத்திய அரசு சார்பில் விளையாட்டுத்துறையில் சிறந்த வீரர் வீராங்கனைகளை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு இந்த ஆண்டு தமிழகத்தின் மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா, மறைந்த ராமகிருஷ்ணன் காந்தி ஆகியோருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை பட்டியலில் சத்ய நாராயணா பெயரை மட்டும் நீக்கியுள்ளது. இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ சத்யநாராயணா மீது குற்றவியல் வழக்கு உள்ளது. இதனால் இவர் துரோணாச்சார்யா விருதுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்,’’ என்றார்.
It has been learnt that several people had raised objections when Satyanarayana's name was recommended for Dronacharya Award.
Mobile AppDownload Get Updated News