நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப்பெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். இந்த போட்டிகளில் பதக்கம் வெல்வதே பல விளையாட்டு வீரர்களின் லட்சியமாக வைத்துள்ளனர்.
வரும் 2020ல் நடைப்பெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைப்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024ல் நடைப்பெறும் ஒலிம்பிக் போட்டி யார் நடத்துவது என்பதில் பாரிஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களிடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த போட்டி முடிவில், 2024ல் பாரிஸிலும், 2028ல் நடைப்பெறும் ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சலிலும் நடத்த ஒப்புக் கொண்டுள்ளன.
Mobile AppDownload Get Updated News