Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

கல்லூரியில் சரியாக படிக்காதது என் அதிர்ஷ்டம் : கோபிசந்த்

$
0
0

கல்லூரி நாட்களில் சரியாக படிக்காதது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று இந்தியாவின் பேட்மிண்டன் தலைமை பயிற்சியாளர் கோபி சந்த் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வாங்கிய சிந்துவின் பயிற்சியாளர் முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபி சந்த். இவர் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வாங்கிய சாய்னா நேவாலின் பயிற்சியாளரும் ஆவார். இவருடைய சகோதரரும், இவரும் விளையாட்டு வீரர்கள். ஆனால் தான் கல்லூரியில் சரிவர படிக்காததே தன்னுடைய அதிர்ஷ்டம் என்று கோபி சந்த் கூறியுள்ளார். மாநில விளையாட்டு வீரராக இருந்த போது தேர்வு எழுதி ஐஐடியில் சேர்ந்தார். பேட்மிண்டன் விளையாடுவதை முழுவதுமாக விட்டுவிட்டார். ஆனால் பொறியியல் தேர்வுகளில் தோல்வி அடைந்ததால் மீண்டும் விளையாட தொடங்கியிருக்கிறார்.

இந்தியாவில் ஆல் இங்கிலாந்து போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை 2001-ஆம் ஆண்டு பெற்றார். அதன்பின்னர் ஓய்வு அறிவித்து சொந்தமாக பயிற்சி மையம் தொடங்க கோபி சந்த் முடிவெடுத்தார். ஆனால் பயிற்சி மையம் தொடங்குவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை என்றும் பலரும் தன்னை மோசமாக நடத்தியதாக கூறுகிறார். ஆனால் நல்ல உள்ளங்களின் ஆதரவினால் இந்த இடத்திற்கு வரமுடிந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டது என்றும், நான் செய்ய நினைத்ததை செய்து முடித்துவிட்டதாகவும் கோபி சந்த் தெரிவித்துள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>