ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் லட்சுமண், கோபி, காளிதாஸ் ஹிரேவ் பங்கேற்றனர். இதில் அபாரமாக செயல்பட்ட தமிழக வீரர் லட்சுமண், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம், இம்முறை 2வது தங்கம் வென்றார். முன்னதாக 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். தவிர இது, ஆசிய தடகளத்தில் இவரது 4வது பதக்கம். கடந்த 2015ல் சீனாவின் உகான் நகரில் நடந்த ஆசிய தடகளத்தில் ஒரு வெள்ளி (10,000 மீ.,), ஒரு வெண்கலம் (5,000 மீ.,) கைப்பற்றினார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூறும்போது, " ஆசிய தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற வட்சுமணனுக்கும் , ஆரோக்கிய ராஜிவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரு தங்க பதகங்களை வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சமும் , வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.15 லட்சமும் பரிசு தொகை வழங்கப்படும் "என்று அவர் தெரிவித்தார்.
Mobile AppDownload Get Updated News