Congratulations to all the Indian athletes for helping India stand first in the #AsianAthleticsChampionships . Super proud ! pic.twitter.com/ilBIbytz0A
ஒடிசா மாநிலத்தில் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் இந்தியாவில் இருந்து 95 வீரர்கள் கலந்து கொண்டனர். கடந்த 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற்றன. பதக்க பட்டியலில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டரில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இந்திய தடகள வீரர்களால், நம் நாடே மிகவும் பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.
Congratulations to all the Indian athletes for helping India stand first in the #AsianAthleticsChampionships. Super proud !
Mobile AppDownload Get Updated News