உலகின் மிகப்பழமையான டென்னிஸ் தொடரான விம்பிள்டன் ஓபன் லண்டனில் நேற்று தொடங்கியது. ஜூலை 16ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடரில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 6- 1, 6- 3, 6- 2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியா வீரர் ஜான் மில்மேனை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ரஃபேல் நடால் சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனது 850வது வெற்றியை பதிவு.செய்தார். இச்சாதனையை வசமாக்கிய 7வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இப்போட்டி நடாலுக்கு 50வது விம்பிள்டன் ஆட்டமாகவும் அமைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே ரஷ்யாவின் அலெக்ஸான்டர் பப்ளிக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில், சுவிசர்லாந்தின் வாவ்ரின்கா ரஷ்யாவின் மெத்வதேவிடம் 6-4, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்றார்.
Mobile AppDownload Get Updated News