ஜகார்த்தா: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் பைனலில் ஜப்பானின் கசுமாசா ஷகாயை, இந்தியாவின் ஸ்ரீகாந்த் எதிர்கொண்டார்.
இதில் துவக்க முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த், முதல் செட்டை, 21-11 என கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய ஸ்ரீகாந்த், 21-19 என தன்வசப்படுத்தினார்.
முடிவில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கசுமாசா ஷகாயை 21-11, 21-19 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
Mobile AppDownload Get Updated News