Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

விளையாட்டு மீது அதிக ஈடுபாடு உள்ளவர் மோடி !

$
0
0

புதுடில்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு மீது அதிக ஈடுபாடு உள்ளவர் என இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் கூறியுள்ளார்.

பிரேசிலின் ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து வெள்ளிப்பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கோபிசந்த். இவர் தற்போதைய இந்திய அரசு விளையாட்டுத்துறைக்காக அதிக அக்கரை காட்டுவதாகவும், அதற்கு பிரதமர் மோடியே காரணம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோபிசந்த் கூறியது:
பேட்மிண்டன் போட்டி நடக்கும் போது பாதியில் உங்களுக்கு நாட்டின் பிரதமர் டுவிட்டரில் தகவல் அனுப்பினால், எந்த அளவு விளையாட்டின் மீது ஆர்வம் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளின் போது மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் முன் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளையும் தனித்தனியாக உற்சாகப்படுத்தினார். மீண்டும் இந்தியா திரும்பியது அவர்களுக்கு உற்சாகம் அளித்தார். இது போன்ற செயல்தான் ஒரு விளையாட்டு வீரரை மேலும் சாதிக்க தூண்டும். இதேபோல 2012ல் சாய்னா பதக்கம் வெல்லும் போதும் பிரதமர் அலுவலகத்துக்கு சென்றோம். அப்போது எங்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. நாங்களும் பிற கட்சியினரைப்போல காக்க வைக்கப்பட்டோம்.
இவ்வாறு கோபிசந்த் கூறினார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>