சென்னை: இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டராக சென்னையின் ஸ்ரீநாத் நாராயணன் பட்டம் பெறுகிறார்.
இதன் மூலம் நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டராக என்ற பெருமை பெறுகிறார் ஸ்ரீநாத். ஷார்ஜாஸ் மாஸ்டர்ஸ் உலக செஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் டேவிட் ஆண்டன் கிஜாரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
ஸ்ரீநாத் தனது எட்டாவது வயதில் தேசிய அளவில் இளம் வயது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டார். பின் தனது 14-வது வயதில் சர்வதேச மாஸ்டரானார் ஸ்ரீநாத். தொடர்ந்து ஆசிய அளவில், பின் சர்வதேச அளவிலும் பல பட்டங்களை வென்று காட்டினார்.
இதுவரை ஐந்து மாஸ்டர் பட்டங்களை தன்வசம் வைத்துள்ள ஸ்ரீநாத்துக்கு தற்போது உயரிய அங்கீகாரமான இந்திய கிராண்ட் மாஸ்டர் பட்டமும் கிடைத்துள்ளது.
Mobile AppDownload Get Updated News