உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரின் பெயரை போர்ச்சுக்கல் நாட்டில் மடெய்ரா தீவில் அமைந்துள்ள விமான நிலையத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் அதிக ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு கால்பந்து. இந்த கால்பந்து போட்டியில் ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழ்பவர் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் 4 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் போர்ச்சுக்கல் நாட்டின் அடையாளமாக திகழ்கிறார்.
இதன் காரணமாக மடெய்ரா தீவில் அமைந்துள்ள மடெய்ரா விமான நிலையத்த்தின் பெயரை மாற்றி கிறிஸ்டியானோ ரொனால்டோ விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Mobile AppDownload Get Updated News