IOA President N.Ramachandran says no resolution to appoint Abhay Chautala & Suresh Kalmadi as life presidents was passed in the Chennai AGM
அண்மையிர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவர்களாக சுரேஷ் கல்மாடி மற்றும் அபய் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவர் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் அவர்களை ஆயுட்காலத் தலைவர்களாக அறிவித்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர், என்.ராமச்சந்திரன் கல்மாடி மற்றும் அபய் ஆகியோரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிரந்தரத் தலைவராக நியமிப்பது பற்றி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறியுள்ளார்.
2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழலில் அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு ஏற்பட்டதாக போட்டி அமைப்பு குழு தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டிருக்கிறார். அபய் சவுதாலா மீதும் விளையாட்டு தொடர்பான ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.
Mobile AppDownload Get Updated News