புஷாவ்: சீன ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஃபைனலுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார்.
சீனாவின் புஷாவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய நாயகி, பி.வி.சிந்து, தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை எதிர்கொண்டார்.
இதன் முதல் செட்டை 11-21 என இழந்த பி.வி. சிந்து, இரண்டாவது செட்டை 23-21 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டில் அசத்திய சிந்து, 21-19 என தன்வசப்படுத்தினார்.
முடிவில், இந்தியாவின் சிந்து, தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை, 11-21, 23-21, 21-19 என வீழ்த்தி ஃபைனலுக்கு தகுதி பெற்றார். இவர் ஃபைனலில் சீனாவின் சுன் யூவை சந்திக்கவுள்ளார்.
Mobile AppDownload Get Updated News