சர்வதேச கால்பந்து அரங்கில் சிறந்துவிளங்கும் வீரர்களுக்கு, ஆண்டுதோறும் பிபா விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில் 7 முறை இவ்விருதை வென்ற அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களைத்தவிர, உள்ளூர் கால்பந்து தொடர்களில் சிறந்து விளங்கும் வீரர்களுனான கிராத் பேல்,, பப்பன் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இப்பட்டியலில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, பின் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, சிறந்த வீரர் விருதை வெல்லும் வீரர் யார் என்பது இறுதிசெய்யப்படும். தொடர்ந்து ஜூரிச்சில் நடக்கும் விழாவில், அவருக்கு சிறந்த கால்பந்து வீரருக்கான தங்ககால்பந்து விருது வழங்கப்படும்.
Mobile AppDownload Get Updated News