Quantcast
Viewing all articles
Browse latest Browse all 2245

Chess Olympiad 2022: ‘செஸ் மட்டுமல்ல’...கால்பந்து போட்டியும் நடைபெறும்: சூப்பர் அறிவிப்பு..விபரம் இதோ!

இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை, நடத்தும் வாய்ப்பை தமிழகம் பெற்றிருப்பதால், செஸ் ஒலிம்பியாட்டை உலகமே வியக்குமளவிற்கு வெகு சிறப்பான ஏற்பாடுகளை செய்து சிறப்பாக நடத்தி வருகிறது. இத்தொடர் குறித்த விழிப்புணர்வை தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பரப்ப முடிவு செய்த தமிழக அரசு சென்னை நேபியர் பாலம், பேருந்துகள், மக்கள் வசிக்கும் பகுதிகள் மிகுந்த கட்டிடங்கள் போன்ற இடங்களில் இந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஐகான் ‘தம்பி’ சின்னத்தை வரைந்து பிரபலப்படுத்தப்பட்டது.

முதலிடம்:


இத்தொடரின், முதல் சுற்றில் விளையாடிய இந்திய வீரர்கள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்கள். இந்நிலையில் அடுத்தடுத்த சுற்றுகளில் சில தோல்விகளை சந்தித்தாலும், அதிக வெற்றிகளைப் பெற்று தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது..

8 வயது வீரர் முதல் 78 வயது வீரர் வரை செஸ் ஒலிம்பியாட் தொடரில் பலர் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கால் பந்து போட்டி:

இந்நிலையில், செஸ்ஒலிம்பியாட் தொடரை நடத்தும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE), ஐஎஸ்ல் தொடரில் விளையாடும் சென்னையின் எப்.சி அணியுடன் இணைந்து கால்பந்து தொடரை நடத்த உள்ளது. போட்டிக்கான அதிகார பூர்வ அறிவிப்பையும் அட்டவணையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. செஸ் கூட்டமைப்பு நடத்தும் கால்பந்து போட்டி ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி சென்னையில் உள்ள, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

மொத்தம் 6 அணிகள்:

நடக்கவிருக்கும் கால்பந்து தொடரில் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. சர்வதேச செஸ் கூட்டமைப்பு FIDE தலைமையிலான ஒரு அணியும், இந்திய செஸ் கூட்டமைப்பு AICF தலைமையிலான ஒரு அணியும், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா நாடுகள் தரப்பில் ஒவ்வொரு அணியும் களமிறங்கி விளையாட உள்ளது. போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகள் மூன்று அணிகள் கொண்ட இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

14 நிமிடங்கள்தான்:

போட்டிகள், இரண்டு சுற்றுகளாக நடைபெற உள்ளது. 14 நிமிடங்கள் நடைபெறும் இந்த போட்டியில் 4 நிமிடம் இடைவெளி விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


இரண்டு பழைய புத்தகங்கள்!


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1881 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024...


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>