2005ஆம் ஆண்டில் நடைபெற்ற WTA தொடரில், ஒற்றையர் பரிவில் பட்டத்தை வென்று, இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். தற்போது, ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் பங்கேற்ற அவர், முதல் சுற்றில் தோற்ற நிலையில் 2022 சீசனோடு ஓய்வினை அறிவித்துள்ளார். தனது 3 வயது மகன் மற்றும் உடல்நிலையைக் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவினை எடுத்துள்ளேன் என ஓய்வு கடித்தத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அந்த கடித்தத்தில், ‘‘இதுவே டென்னிஸில் எனது கடைசிப் பருவம். எப்போதெல்லாம், காயமடைந்தால் உடனே தேற முடியவில்லை. காயத்திலிருந்து மீண்டு வர அதிக காலம் எடுக்கிறது. 3 வயது மகனும் என்னுடன் தொடர்ந்து பயணம் செய்வதால், அவனுக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இப்போட்டியில் விளையாடியபோது கூட எனது கால்கள் வலித்தது. ஆனால், அதை தோல்விக்கான காரணமாக கூறவில்லை. கடின உழைப்பால் எனது உடல் எடையை குறைத்து இளம் தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக இருப்பேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழும் சானியா மிர்சா, கடந்த ஆண்டு செப்டம்பரில் இரட்டையர் பிரிவில் 43ஆவது பட்டத்தை வென்றிருந்தார். இவர் டென்னிஸ் வாழ்க்கையில் இதுவரை வென்ற தொகை இந்த மதப்பில் சுமார் 52 கோடி என டென்னிஸ் சங்க தரவுகள் கூறுகிறது. ஆனால், இந்த தொகையைவிட அவர் அதிகமாக, தனது அபார திறமை மூலம் 100 கோடி இந்தியர்களின் இதயங்களை வென்றிருந்தார் என்பதுதான் நிஜம்.
சானியா மிர்சா வென்ற முக்கிய பட்டங்கள்:
திருமண வாழ்க்கை:
2010ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கை திருமண் செய்துகொண்டார். 2018-ல் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News