Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

உலக சாம்பியன்...இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து: 2018-ல் நடந்ததை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

$
0
0

தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே பங்கேற்கும் பேட்மிண்டன் உலக சாம்பியன் தொடர், இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில், தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து பங்கேற்று விளையாடி வருகிறார்.

இத்தொடரின் முதல் இரண்டு லீக் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற சிந்து, கடைசி லீக் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவாங்கை எதிர்கொண்டு 12-21, 21-19, 14-21 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தார். இருப்பினும், முதல் இரண்டு லீக் போட்டியில் வெற்றிபெற்றதால், ஏ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்குச் சென்றார்.

அரையிறுதியில் சிந்துவிற்கும், ஜப்பானின் அகானே யமாகுச்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது. குறிப்பாக கடைசி செட் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்றது இறுதியில் சிந்து 21-15, 15-21, 21-19 என்ற கணக்கில் போராடி வென்றார். இந்த த்ரில் வெற்றியின் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாளை நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் பி.வி.சிந்துவை எதிர்த்து தென் கொரோயா வீராங்கனை அன் சி-யங் களமிறங்கவுள்ளார். பி.வி.சிந்து ஏற்கனவே 2018ஆம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். இம்முறையும் கைப்பற்றி சாதனை படைப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245