மலேசியாவின் குவாந்தான் மாவட்டத்தில் ஆசிய அணிகள் மட்டும் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித்தொடர் நடக்கிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, தனது இரண்டாவது லீக் போட்டியில், தென் கொரியாவை எதிர்கொண்டது.
இதில் துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். இதற்கு பலனாக தென் கொரிய அணிக்கு போட்டியின் 11வது நிமிடத்தில், ஜியாங் முதல் கோல் அடித்தார். இதற்கு இந்திய வீரர், லலித் உபாதே பதிலடி கொடுத்தார். இதையடுத்து போட்டி 1- 1 என சமநிலையை எட்டியது.
இதன்பின் இரண்டாவது பாதியில் இரு அணிவீரர்களும் கோல் அடிக்க எவ்வளவோ போராடினர். ஆனால், இறுதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
இதையடுத்து இறுதியில் போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.
இதுவரை பங்கேற்றுள்ள இந்திய அணி, 1 வெற்றி, 1 டிரா என 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மலேசிய அணி உள்ளது. இந்திய அணி, நாளை நடக்கவுள்ள அடுத்த லீக் போட்டியில் தனது பரமஎதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
Mobile AppDownload Get Updated News