ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதனால் தற்போது சிந்து இந்திய விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். சிந்துவால் கவரப்பட்டவர்களில் மத்தியப் பிரதேசம், கண்ட்வா மாவட்ட கலெக்டரும் ஒருவர்.
கண்ட்வா மாவட்ட கலெக்டரான சுவாதி மீனா நாயக் தற்போது பெண்களைப் பார்த்து பெருமைப்படுவதாகவும், என் மாவட்ட பெண்களுக்கு இலவசமாக பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கான் இலவச பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக ஒரு விளையாட்டு கிளப் ஆரம்பிக்கப்பட்டு அங்கு இலவச பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
திறமையான மற்றும் தைரியமான கலெக்டர் என அறியப்பட்ட சுவாதி மீனா மணல் கடத்தல் மற்றும் நக்சலைட்டுகள் சம்பந்தமான பிரச்னைகளை திறமையாக கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News