Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

உலகக் கோப்பை கபடி:இறுதிப்போட்டியில் இந்திய அணி

$
0
0

உலகக் கோப்பை கபடி அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது.

3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டியில் அரையிறுதி போட்டிக்கு நடப்பு சாம்பியன் இந்தியா, தாய்லாந்து, ஈரான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முன்னேறின.முதல் அரையிறுதிப் போட்டியில் ஈரான் மற்றும் தென்கொரிய அணிகள் மோதின. இதில் தென்கொரிய அணியை 28-22 என்ற கணக்கில் ஈரான் அணி தோற்கடித்தது. இதன்முலம் உலகக்கோப்பை கபடி தொடரின் இறுதி போட்டிக்கு ஈரான் அணி முன்னேறியது.

இரண்டாது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இரவு 9 மணியில் இந்த போட்டி நடைபெற்றது.தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 36-8 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே நிலவியது.

இறுதியில் தாய்லாந்து அணியை 73-20 என்ற புள்ளி கணக்கில் அபாரமாக வீழ்த்தி, இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- ஈரான் அணிகள் மோதுகின்றன.
English Summary :India will be making their third successive appearance in the final of the Kabaddi World Cup after defeating Thailand in the second semi-final of the tournament on Friday in Ahmedabad.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>