இரண்டு வாரங்களுக்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஸ்ட்ரைக்கர் மார்ஸியல் மீது கடுமையான நிற வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியின் டுவான்செபே தாக்கப்பட்டார். தொடர்ச்சியாக இதுபோன்று பல முகம் தெரியாத நபர்கள் நிறவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மான்செஸ்டர் யுனைடெட் அணி மட்டுமல்லாமல் செல்சீ அணியின் தடுப்பு ஆட்டக்காரர்களான ருடிகர் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் மேலும் இதுபோன்று நிறவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பிரீமியர் லீக் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இதர அமைப்பினர் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் எக்ஸ் வீடியோ என அனைவருக்கும் கோரிக்கை வைத்தனர். இதுபோன்று நிறவெறி தாக்குதலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை நடந்து முடிந்த யூரோப்பா லீக் ஆட்டத்தில் ஆர்சனல் அணி 1-1 என்ற கோல் கணக்கில் பெனிஃபிக்கா அணியுடன் டிரா ஆனது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் ஆர்சனல் அணியின் முன்கள வீரர்களான வில்லியன் மற்றும் என்கேத்தியா ஆகியோர் மீது நிறவெறி தாக்குதல் நடத்தினர். அந்த ஆட்டத்தில் என்கேத்தியா களமிறங்கவில்லை என்பதும் வில்லியன் இரண்டு நிமிடங்கள் மட்டுமே களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறவெறி வன்மத்தை வில்லியனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண்பித்துள்ளனர் என்பதை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்தார். தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு ஆர்சனல் வீரரான என்கேத்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் 'Time To Change' என்று பதிவிட்டிருந்தார். பொதுவாக வீரர்களின் செயல்பாடு குறித்து விமர்சித்து வந்த கால்பந்து ரசிகர்கள், தற்பொழுது நிறவெறி தாக்குதலில் ஈடுபடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
Mobile AppDownload Get Updated News