Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

மீண்டும் ஒரு ஆட்டம், மீண்டும் ஒரு டிரா: கடந்த 6 ஆட்டங்களில் 5 இப்படித்தான்!

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 73வது ஆட்டத்தில் கேரளா அணியும், ஜம்சேத்பூர் அணியும் மோதின. இரு அணிகளும் 14 புள்ளிகளுடன் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தை வகித்தனர். இதில் வெற்றி பெறும் அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறும். இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டம் நடப்பு இந்தியன் சூப்பர் லீக் சீசனில் பல சுவாரசியமான ஆட்டங்களில் ஒன்று. அதைப் போன்று இந்த ஆட்டமும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தை 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா அணி கைப்பற்றியது. அந்த தோல்விக்கு பழிவாங்கும் முனைப்போடு ஜம்ஷெட்பூர் அணி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் கடந்த நான்கு ஆட்டங்களில் 3 தோல்வி, ஒரு டிரா என ஒரு வெற்றியையும் பதிவு செய்யாமல் மிக மோசமான ஒரு ஓட்டத்தில் ஜம்சேத்பூர் சிக்கிய நிலையில் இன்று களமிறங்கியது. மறுமுனையில் கடந்த நான்கு ஆட்டங்களில் இரண்டு வெற்றி, இரண்டு டிரா என தோல்வி அடையாமல் ஒரு வேகத்தோடு கேரளா அணி களம் இறங்கியது. ஆட்டம் துவக்கத்திலிருந்து சரிசமமாக அமைந்தது. இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டத்தில் கோல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜம்சேத்பூர் அணி சார்பாக பிளிட்ஸ்ஜெரால்ட் அவ்வப்போது கேரளாவின் தடுப்பு ஆட்டத்தை சோதித்தார்.
80495930

80485811

ஆனால் பெரிய அளவில் ஜம்சேத்பூர் அணி வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. மறுமுனையில் கேரளா அணியும் அவ்வப்போது கோலை நோக்கி பந்தை அடித்த வண்ணமிருந்தனர். ஆனால் கோல் எதுவும் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் நாற்பதாவது நிமிடம் தொடங்கி அடுத்த ஐந்து நிமிடத்திற்கு கேரளா அணி ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தியது கேரளா அணியின் முன்கள வீரரான முரே மற்றும் ஹூப்பர் ஆகியோர் கேரளா அணியை எப்படியாவது முன்னிலை பெறச்செய்து விடவேண்டும் என்று நடத்திய தாக்குதல்கள் மூன்று முறை கோல் கம்பத்தில் பட்டு பந்து வெளியேறியது.

முதல் பாதி முடியும் தருவாயில் நடத்திய அந்த தாக்குதலில் ஒரு கோல் கூட பதிவாகவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல் பாதி இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது இரண்டாம் பாதிக்கு எதிர்பார்ப்பை தாறுமாறாக உயர்த்தியது. முதல்பாதியில் கோல் எதுவும் கிடைக்காததால் இரண்டாம் பாதியை புயல் வேகத்தில் தொடங்கிய இரு அணிகளும் தொடர்ச்சியாக வாய்ப்புகளை ஏற்படுத்திய வண்ணமிருந்தனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டனர். குறிப்பாக கேரளா அணி இரண்டாம் பாதியில் விளையாடிய வேகத்திற்கு குறைந்தது 2 கோல் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களது முன்கள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால் கோல் எதுவும் கிடைக்காமல் போனது.
80495938

80492630

இரண்டாம் பாதியில் கேரளா பதினோரு முறை கோலை நோக்கி பந்தை அடித்தன. ஆனால் அதில் ஒன்று கூட கோலுக்கு நேராக செல்லாமல் அனைத்தும் விலகிச் சென்றது. ஆட்டத்தின் முடிவில் வாய்ப்புகள் வீணாவதை பற்றிய கேள்விக்கு பதிலளித்த கேரளா அணியின் துணை மேலாளர் வேடிக்கையாக 'கோல் கம்பம் சற்று சிறியதாக இருக்கின்றது என்று தோன்றியது' என்று கூறினார். புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இரு அணிகளும் பறி கொடுத்து விட்டது. இந்தியன் சூப்பர் லீக் தொடரில் கடைசி 6 ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்கள் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>