Aston Villa can confirm that Sunday's scheduled Premier League fixture with Everton has been postponed.Our fixtur… https://t.co/UPFCrsbDJl | Our away match against Aston Villa, scheduled to be played on Sunday at 12pm, has been postponed by the Premier League Board. #EFC
அவற்றில் ஆஸ்டன் வில்லா குறிப்பிடத்தக்க ஒரு அணி. சென்ற வாரம் கொரோனா பரவல் காரணமாக அதன் பயிற்சி மையங்கள் மூடப்பட்டத. அதுமட்டுமல்லாமல் லிவர்பூல் உடனான ஆட்டத்தை அணியின் மூன்றாம் நிலை நான்காம் நிலை வீரர்களை வைத்து விளையாட நேரிட்டது. இதனால் கடுமையான தோல்வியையும் சந்திக்க நேரிட்டது. மட்டுமல்லாமல் நடப்பு சீசனில் எதிர்பார்ப்புகளை மீறி அட்டகாசமாக விளையாடி வரும் ஆஸ்டன் வில்லாவின் ஆட்டங்கள் சீசனின் ஆரம்பத்திலிருந்தே அவ்வப்போது வெவ்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட வருகின்றது.
டிசம்பர் மாதம் நான்காம் தேதி நியூகாசில் உடனான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது, அந்த ஆட்டம் இப்பொழுது ஜனவரி மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோட்டன்ஹாம் அணியுடன் இன்று நடக்கவிருந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் டோட்டன்ஹாம் அணி புல்ஹாம் அணியுடன் மோதியது. இந்த மாதம் 17ஆம் தேதி எவர்டன் உடனான ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல் கோப்பையை வென்ற பொச்செடினோ: டிராபி டி சாம்பியன்ஸ் கோப்பையை தூக்கிய பிஎஸ்ஜி
இது சம்பந்தமாக ஆஸ்டன் வில்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்றிலிருந்து வீரர்கள் எல்லாரும் குணமடைந்து விட்டனர். எனினும் இன்னும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் அதன் காரணமாக ஆஸ்டன் வில்லாவின் வேண்டுகோளுக்கு இணங்க, எவர்டன் உடனான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் நடப்பு சீசனில் நான்கு முறை ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து ஆட்டங்கள் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் வீரர்களின் ஆட்டத்திறன் பாதிக்கப்படும் என்று ரசிகர்கள் அஞ்சுகின்றனர்.
Mobile AppDownload Get Updated News